search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை மோசடி"

    சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை, ஜன.5-

    சென்னை துறைமுகத் தில் வேலை வாங்கித்தரு வதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பேரையூர் முடக்கு சாலையைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன்அருள் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.

    இந்த நிலையில் திண்டுக் கல்லைச் சேர்ந்த 2 பேர் முத்து ராமலிங்கத்தை தொடர்பு கொண்டு உங்கள் மகனுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித்தருகிறோம். அதற்கு பணம் செலவாகும் என்று ஆசை வார்த்தை கூறினர்.

    இதனை நம்பிய முத்து ராமலிங்கம், அவர்களிடம் பல்வேறு தவணைகளில் ரூ.16 லட்சத்து 38 ஆயிரம் கொடுத்தார். இருப்பினும் அவர்கள் கொடுத்த வாக்கு றுதியின்படி சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித்தரவில்லை.

    முத்துராமலிங்கத்திடம் வாங்கிய பணத்தையும் திருப்பித்தர மறுத்து விட்ட னர். இது தொடர்பாக முத்துராமலிங்கம் பேரையூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் பண மோசடி செய்தவர்களில் ஒருவர் திண்டுக்கல் மாவட் டம், எரியோட்டைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் (56) என்பதும், தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார ஆய்வாளராக இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    சவுந்தர்ராஜனுக்கு உடந்தையாக அவரது மகன் தனராஜ் (34) இருந்துள்ளார். இதையடுத்து தந்தை-மகன் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4.45 லட்சம் மோசடி செய்த 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    மதுரை:

    மதுரை சமயநல்லூரை அடுத்துள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மோகன் (52). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர் மோகனிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருகிறோம். யாராவது இருந்தால் வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றனர்.

    இதனை நம்பிய மோகன் வெளிநாட்டு வேலைக்காக ரூ.60 ஆயிரமும் அதே பகுதியைச் சேர்ந்த ராணி, ஜானகி, சுந்தரேஸ்வரி, மோகனா, அழகேஸ்வரி, தேவி நித்யா ஆகிய 6 பேரிடம் ரூ.3.85 லட்சம் பணத்தையும் மொத்தம் 4.45 லட்சம் பெற்றுக்கொண்டு வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் மோகன் சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மர் விசாரணை நடத்தி முத்து, அவரது மனைவி செல்லம்மாள் மற்றும் தமிழரசி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மதுரையில் ஏலச்சீட்டு நடத்துபவரிடம் ரூ. 12 1/2 லட்சம் மோசடி செய்த கணவன் - மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை:

    மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தில் உள்ள நேதாஜி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் மாயகுமார் (வயது 32). இவர் அருகில் உள்ள கண்மாய்க்கரை பகுதியில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரிடம் அதே பகுதியைச்சேர்ந்த பலர் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் கட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாயக் குமார் செல்லூர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அழகர்கோவில் மெயின் ரோட்டைச் சேர்ந்த சரவணக் குமார், அவரது மனைவி ஆகியோர் ஏலச்சீட்டில் சேர்ந்தனர். அவர்கள் பணம் கட்டுவதற்கு முதல் மாதத்திலேயே மொத்த ஏலச்சீட்டு தொகை ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக் கொண்டனர்.

    பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் பின்னர் சீட்டுப்பணத்தை செலுத்தவில்லை. பலமுறை பணம் கேட்டும் எந்த பதிலும் இல்லை. மேலும் பணத்தை தர முடியாது என மிரட்டல் விடுக்கின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் சரவணக்குமார் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×